பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 வருவது என்பது இயலாத காரியம். அவசியம் என்று கருதினால் ஒவ்வொரு தீர்த்தக்கட்டத்திலும் தீர்த்தத்தை அள்ளி த ைல யி ல் புரோதித்துக்கொண்டு திருப்தி 'படையலாம் குருக்ஷேத்திரம் ஒரு ருத்ர பூமியே, என்றாலும் தோ உபதேசம் நடத்த கண்ணன் தேர்ந்து எடுத்த இடம் என்ப தால் எவ்வளவோ புனிதமானதாக கருதப்படுகிறது. முஸ்லீம்களுக்கு காபாவும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசல மும் எவ்வளவு புனிதமான இடமோ அவ்வளவு புனிதம் உடையதாகவே இந்த குருக்ஷேத்திரம் கருதப்படுகிறது. ஆதலால் ஒரு நடை இத்தலத்திற்குச் செல்லாவிட்டால் நமது தல யாத்திரை பூரணம் அடைந்ததாகக் கருதப்ப்ட மாட்டாது. -