பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19

வழுவூர் கஜசம்ஹாரர்

விமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாடல்களில் பிச்சைக்காரர் கும்மாளம் என்று ஒரு பாட்டு, சத்திரத்திலே சாப்பாட்டுச் சாவடியிலே தூங்கும் பிச்சைக்காரர்கள் வாழ்க்கை எவ்வளவு கவலையற்ற வாழ்க்கை என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்கள் கவிமணி. உண்டு வயிறு நிறைந்து உள்ளக் கவலை ஒழித்து நிற்கும் அவர்கள் வாழ்வு சிறந்தது என்றே சொல்கிறார்கள். அவர்கள் கற்பனையில் உருவான பிச்சைக்காரர் போடும் கும்மாளத்தைத்தான் பாருங்களேன்.

ஆலமரத்தின் நிழல் இதுவே-நல்ல
ஆயிரங்கால் எழு மண்டபமாம்
சாலவே தங்கும் பறவையெலாம்-அதில்
சங்கீதம் பாடிடும் பாடகராம்.

என்றெல்லாம் பெருமிதத்துடன் பாடும் பிச்சைக்காரர்கள் கடைசியில்,

ஆதிசிவனும் ஓர் ஆண்டியடா-அவர்க்கு
அன்பான பிள்ளைகள் நாமேயடா
ஓது மெய்ஞ்ஞானியார்யாவருமே-நமக்கு
உற்ற உறவினர் ஆவாரடா