பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

உங்களை வந்தடையும் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நூலுக்கு ஓர் அணிந்துரை வேண்டுமென்று, பேராசிரியர் டாக்டர் திரு. கு. அருணாசலக்கவுண்டர் அவர்களைக் கேட்டிருந்தேன் . அவர்களும் எழுதியனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்' - தொண்டைமானவர்களுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் உள்ளவர். தொண்டைமானவர்களின் மணிவிழாவை முன்னின்று நடத்தியவர் - உடல் நிலை காரணமாக, அணிந்துரையை உரிய காலத்தில் எழுதியனுப்ப முடியாது போய்விட்டது. தமது 97-வது அகவையில், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தினரால் அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு மாத காலத்துக்குள் இறைவனடி சேர்ந்து விட்டார். அந்தப் பேராசிரியருக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்வதில் மன நிறைவு பெறுகிறோம்.

ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்

பாஸ்கர நிலையம்
7 வது குறுக்குத் தெரு
சாஸ்திரி நகர்
சென்னை - 20.