பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வேங்கடம் முதல் குமரி வரை

இப்படி விநாயகரே இறைவனைத்தேடி, அவரை வலம் வந்து அருள் பெற்ற தலம்தான் திருவலம் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தபோது அந்தக் - கோயில் வாயிலில் உள்ள நந்தி மற்ற கோயில்களில் இருப்பதைப் போல இறைவனை நோக்கி நிற்காமல் அவர் இருக்கும் திசையை விட்டுத் திரும்பி கிழக்கு நோக்கி ஓடுங்கோலத்தில் இருப்பதையும் கண்டேன்.

தல வரலாற்றைப் புரட்டினால் ஏதோ கஞ்சாசுரனை விரட்டிக் கொண்டு ஓடுகிறது. நந்தி என்று கதை சொன்னாலும் எனக்கென்னவோ பசுவாகிய உயிரின் பதியாகிய இறைவனை விட்டு விலகி ஓடும் நிலையைத் தான் இந்த நந்தி குறிப்பிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆம், தாம்ஸன், அப்பர் போன்றவர்கள் எல்லாம் விளக்கிய உண்மைக்கே உருவம் கொடுத்து நிறுத்தியது போல் இருந்தது.

இந்தத் திருவலம் ஒரு சிற்றூர். சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பெரு வழியில், சென்னையிலிருந்து - எழுபத்தி ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. ஊரை அடுத்து பொன்னை என்னும் நீவாநதி ஓடுகிறது. அந்த ஆற்றைக் கடக்க ஒரு பெரிய பாலம் ஒன்றும் கட்டியிருக்கிறார்கள். இந்தப் பாலம் முழுவதும் உருக்குச்சட்டத்தால் கட்டி ஈயவெள்ளை வர்ணமும் அடித்திருப்பதால் சினிமாப்படம் பிடிப்பவர்களுக்கு வசதியாக இருக்கிறது.