பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வேங்கடம் முதல் குமரி வரை

யெல்லாம் எம்பெருமான்
என்றே கண்கள் நீர் மல்கி
மண்களில் உளவன சீர்
வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் யென்னினமான் புகும்
ஊர் திருக்கோளூரே

என்று நம்மாழ்வாரால் பாடல் பெறும் பேறு பெற்ற ஊர் ஆயிற்றே. இங்குள்ள வைத்த மாநிதியாம் மது சூதனனை வணங்கி விடைபெற்று, நவதிருப்பதிகளில் பிரதான தலமாகிய ஆழ்வார் திருநகரி என்னும் குருகூர் வந்து சேரலாம்.

அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆதிநாதப் பெருமாள், பொலிந்து நின்ற பெருமாள், சடகோபர் என்னும் நம்மாழ்வார், அவர் இளமையில் இருந்த திருப்புளி எல்லாவற்றையும் தரிசித்து விட்டு ஊர் திரும்பலாம். திரும்பும் போது இதுவோ திருநகரி என்று எக்களிப்போடு பாடிய கவிஞன் போல

சேமம் குருகை யோ?
செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பாராங்குசமோ
நாரணமோ - தாமம்
துளவேர் வகுளமோ
தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு

என்று நவதிருப்பதிகளையும் பாடிய நம்மாழ்வாரிடமே கேட்கலாம். அத்தகைய தெம்பு தான் இதற்குள் நமக்கு வந்திருக்க வேண்டுமே!