பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

வேண்டும் விடுதலை



“ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஒதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”

- என்று முதுமொழிக்காஞ்சி முழங்கும்.

ஒருநாட்டின் பெருமைக்கு, முதற்பெருங் காரணமாய் நிற்போர் அந்நாட்டு மக்களே.


பொய் அறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நல் மாந்தரொடு
-(மதுரைக் காஞ்சி)

விளங்கும் நாடே நாடெனப்படும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்பால், அவன் ஆண்ட உறையூரைப்பற்றி வெள்ளை நாகனார் என்னும் நல்லிசைப் புலவர்.


‘அரசெனப் படுவது நினதே பெரும!
.............................................................
நாடெனப் படுவது நினதே!’

- என்று பாடிப் பரவுகின்றார்.

அத்தகைய நன்மக்கள் வாய்ந்த ஒரு திருநாட்டை அரசும் நெறி திறம்பாமல் ஆளல் வேண்டும்.


“அறநெறி முதற்றே யரசின் கொற்றம்!
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங் கொல்லாது
ஞாயிற் றென்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ்சாயலும்”

உடையராய் ஆளுநர் இலங்க வேண்டும்.


“யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”

- என்று பண்டைத் தமிழரசர் எண்ணி,


“முதுவோர்க்கு முகிழ்ந்த கையினராகவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினராகவும

ஏரோர்க்கு நிழன்ற கோலினராகவும்
நேரோர்க்கு அழன்ற வேலினராகவும்”

-(சிறுபாணாற்றுப்படை)