பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

273

இறுதியாக இராசீவ் அரசுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம். தமிழ்மொழியும், தமிழ் இனமும், தமிழ்நாடும் தில்லியின் அரசியல் வல்லாண்மையிலிருந்து விடுபடும் வரை நம் நேர்மையான போராட்டம் ஓயப் போவதில்லை என்பதை இன்றிருந்து நாளை அழியப் போகும் இராசீவும் அவரின் அடிவருடித் தமிழர்களும் ஆட்சி அதிகாரக் கும்பல்களும் தெளிவாக உணர்ந்து கொள்வார்களாக.

வெல்க மக்கள் போராட்டம்! விளைக மக்கள் விடுதலைப் புரட்சி!

— தமிழ்நிலம், இதழ் எண். 104, மே, 1988