பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

91

அதில் நீங்கள். தன்மானமுள்ள தமிழராகிய நீங்கள் கலந்து கொள்ள வேண்டாவா? உடனே குடும்பத்துடன் அணியமாகுங்கள்!

திருச்சியிலே ஒன்றிணைவோம்!
நினைவிருக்கட்டும் சூன் 10-11.
வாழ்க தமிழர்! வாழ்க தமிழ்நாடு !

தமிழகம் பிரிய வேண்டுவதற்கான பத்துக் கரணியங்கள்

தமிழகம் இந்தியவரசினின்று பிரியாமலிருக்குமானால்...

1. தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. (பலவகை களிலும் முட்டுக் கட்டைகள் இருந்து கொண்டே இருக்கும்)
2. இந்தியை விலக்கவே முடியாது.(என்றைக்கேனும் ஒரு நாள் ஏற்க வேண்டியே தீரும்)
3. குல, சமயப் புரட்டுகள் என்றைக்கும் அகலா.
4. ஆரியப் பார்ப்பன நச்சுத் தன்மை இருந்துகொண்டே இருக்கும்.
5. தமிழ்ப் பண்பு படிப்படியாகக் கெடும்.
6. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியம் அழியும்.
7. சமசுக்கிருதம் தலையெடுக்கும்.
8. தமிழினம் மேலும் சிதறுண்டு போகும்.
9. பொதுவுடைமை யரசமைப்புக்கு வழியே இல்லை.
10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.

திருச்சி மாநாட்டு ஊர்வத்திற்கென
தென்மொழியில் வெளியிடப்பெற்ற முழக்கங்கள்

1. தாய்மொழித் தமிழைத் தவறின்றிப் பேசுங்கள்
2. தனித்தமிழ்ப் பெயரையே தாங்கிக்கொள்ளுங்கள்.
3. கலப்புத் தமிழைக் கடிந்து ஒதுக்குங்கள்.
4. விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள்
5. 'சாதிப் பெயர்களைத் தூக்கி எறியுங்கள்.
6. குலப்பட்டங்களைக் குப்பையில் போடுங்கள்.
7. தமிழர்கள் யாவரும் ஓரினம், ஒரு குலம்!
8. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
9. கோயில் வழிபாடு தமிழில் செய்க.