பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வேண்டும் விடுதலை

10. சாதியும் மதமும் வேதியர் புரட்டு.
11. இந்தி மொழிக்கு என்றும் இடங் கொடோம்.
12. தனித்தமிழ் நாட்டை அடைந்தே திருவோம்.
13. தமிழர் நாடு தமிழருக்கே!
14. வடக்குக் காற்று தமிழர்க் காகாது
15. ஆரியப் பூசல் அறவே ஒழிக!
16. பார்ப்பனப் புரட்டு பயனளிக்காது.
17. அடிமைத் தமிழரே விடிந்தது எழுங்கள்!
18. அரசியல் விடுதலை அடைந்தே திருவோம்!
19. விடுதலை பெற்ற தமிழகம் வேண்டும்!
20. தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்.
21. பார்ப்பன ஆட்சிக்குப் பாடை கட்டுவோம்.
22. ஏற்றத் தாழ்வுகள் மாற்றி அமைப்போம்.
23. ஏழை பணக்காரன் இல்லாது ஒழிப்போம்.
24. உலகத் தமிழரே ஒன்று சேருவோம்!
25. தமிழ்ப்பெரு நிலத்தை விடுவிக்க வாரீர்!

தமிழகப் பிரிவினைக் கொள்கை

1. இப்பொழுதுள்ள தமிழ்நாட்டையும் புதுவை, காரைக்கால் பகுதிகளையும் நடுவணரசுத் தொடர்பினின்று விடுவித்துத் தன்னுரிமை பெற்றதும் சட்டம். ஆளுமை இவற்றில் புதிய முறை வகுத்துத் தனியாட்சி செய்வதும் இந்திய அரசோடு நிலக்காவல் இணைப்பும் வாணிகத் தொடர்பும் கொண்டதுமாகிய தனித்தமிழ் நாடாக இயங்கச் செய்தல்.

2. தன்னுரிமைத் தமிழ்நாடு அமைக்கப் பெற்றபின் அண்டை அயல் மாநிலங்களை நட்பு நாடாகக் கருதி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு, முன் இழந்து போன திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு முதலிய பகுதிகளை மீட்டுத் தமிழகத்துடன் இணைப்பது.

3. உரிமை பெற்ற தமிழகத்தில் குல, மத வேறுபாடற்ற பொதுமைக் குமுகாய அமைப்பும், நிகரமைப் பொதுவுடைமை சார்ந்த பொருளியல் அமைப்பும் குடிவழிக் குழுவாட்சி அரசிய லமைப்பும் ஏற்படுத்தப்பெறும். இவற்றின் விரிவான விளக்கங்கள் பின்னர் வெணியிடப் பெறும்.

- தென்மொழி, சுவடி :10, ஓலை : 1. 1972