பக்கம்:வேலின் வெற்றி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை $7.3 இனிதுறையும் ஆலயத்தையும் அடைந்தார்கள். அப்போது வள்ளி நாயகி தேவயானை யம்மையின் திருவடிகளை வணங்கினாள். உடனே அவள் எழுந்து, வள்ளியை எடுத்து அணைத்து, "இங்குத் தனியளாக இருந்த எனக்கு, நீ ஒரு தோழியாக வந்து சேர்ந்தது நன்று என அன்போடு கூறினாள். பாற்கடற் பள்ளியில் திருமகளும் நிலமகளும் இருபுற மிருக்க, மாயவன் இனிதிலங்கும் பான்மைபோல், தேவயானையும் வள்ளியும் இருபுற மிருக்க, அரியாசனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளினார். விானவர் கோன் பெற்ற மாதும், வேடர்கோன் வளர்த்த மாதும் சிறிதும் வேற்றுமை யின்றி, அன்புடன் அளவளவி, உள்ளமும் உயிரும், சிறப்பும் செய்கையும் ஒன்றாகி, மலரும் மணமும்போற் கலந்து வாழ்ந்தார்கள். . . - "வீரவேல் தாரைவேல் விண்னேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வளி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/181&oldid=919788" இலிருந்து மீள்விக்கப்பட்டது