பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 709 மாறி மாறி ஒலித்த இந்தக் கார் நம்பர்களையும், மாறி மாறி அடித்த அவற்றின் ஹாரன்களையும் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள் குப்பச்சி. இவள் யார் என்கிறீர்களா? - இவள்தான் பிரபல நட்சத்திரமான நிசிலீலாவின் தாயார். பூர்வாசிரமத்தில் குப்பச்சியாக இருந்து, பிற்காலத்தில் குஞ்சம்மாளாகப் புனர்ஜன்மம் எடுத்தவள். "ஏய், எட்டிப் போடா!' 'உங்கப்பன் வீட்டு ரோட்டா நட்ட நடுவே நிற்கிறாயே!” "டிரிங், டிரிங். டிரிங், டிரிங் ..!" "ஹை ஹை.. ஹை ஹை ஹை...!" Ա յւնք է: Ա, ւյւն-է...: ஏற்கெனவே தன் பருவ கால நினைவுகள் கலைந்த கோபத்தோடு பஞ்சனையின் மேல் உட்கார்ந்திருந்த குஞ்சம்மாளுக்கு மேற்படி குரல்களையும் விளலில்களையும் கேட்டதும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது அப்பொழுதும் அவள்