பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#79 வேலை நிறுத்தம் ஏன்? "நீரே சொல்லும் - நேற்று நம் லீலாவின் ஜாக்கெட்டைப் பத்மநாபன் கழற்றினாரா இல்லையா?” என்றார் அவர்களில் ஒருவர். அவ்வளவுதான் "ஈஸ் இட்?" என்று வந்தவர் வாயெல்லாம் பல்லாகக் கேட்டார். "சரியாப் போச்சு, போங்கள்! - அந்த விஷயம் உங்களுக்குக் கூடத் தெரியாதா?” 'தெரியாதே எயார், தெரிந்தால் அந்த ஜாக்கெட்டைக் கழற்றிய கைகளையாவது தொட்டு நான் மார்பில் ஒற்றிக்கொண்டிருப்பேனே!" என்று ஏங்கினார் இன்னொருவர். "இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை; அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கையை அவர் சாப்பிடும் போதுகூட அலம்புவது இல்லையாம்!" "அவ்வளவு சீக்கிரம் அலம்ப எப்படி ஸார், மனம் வரும்? சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய பாக்கியமா அது?" அந்தச் சமயத்தில் "என்ன பாக்கியம்?' என்று குறுக்கிட்டார் கனவான்.