பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வேலை நிறுத்தம் ஏன்? 'எதை?' என்று வள்ளென விழுந்தார் பத்மநாபன் “எது முக்கியமோ அதை எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டீர்களே, ஸார் - இதோ பாருங்கள், ஸ்பான்ஜ் இங்கேயே இருக்கிறது!" என்று காருக்குள் இருந்த அதை எடுத்துக் காட்டினான் அவன். "கொண்டாடா, முட்டாள்!" என்று கையை நீட்டினார் அவர். "சரிதான், நீங்களும் அப்படித்தானா?” என்றான் அவன். "எப்படி?” “தாங்கள் செய்யும் தவறை மறைப்பதற்காக முதலாளிகளெல்லாம் வேலைக்காரர்களைத் திட்டுவது வழக்கம் அதற்கு..." அவன் முடிக்கவில்லை; அதற்குள் பத்மநாபன் விரைந்து வந்து அவன் கையிலிருந்த ஸ்பான்ஜை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, "மூடு வாயை' என்று அதட்டினார். "வாயை மூடியிருந்தால் வாரத்துக்கு ஒரு இடம் நான் ஏன் வேலைக்கு வந்திருக்கப் போகிறேன்?" என்று முணுமுணுத்தான் ஒ கே