பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 முதலாளி வர்க்கத்தின் பேராசை தி காதிபத்தியத்தின் சதி ஏழைகளைத்தான் பாதித்தது; பணக்காரர்களைப் பாதிக்கவில்லை. பாடுபடும் ஏழை எலும்புந்தோலுமாகி மடியவும், பாடுபடாத பணக்காரன்பருத்திப் பொதியைப் போன்று வளரவும், பிரிட்டிஷாரின் சுயநலக் கொள்கை இடம் கொடுத்தது. இந்திய முதலாளி வர்க்கமும், வர்த்தக வர்க்கமும் பிரிட்டிஷாரின் கணக்கற்ற காகித நோட்டுகளைக் கைநிறைய பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ராணுவத் தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தன.