பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 67 இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, தாங்கள் அடைந்திருக்கும் பொதுஜனச் செல்வாக்கை அவர்கள் தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக் கொள்ளப் பார்ப்பது துரோகமாகும். அப்படித்தான் இந்த மத்தியஸ்தர் விஷயத்தில் அதிகார வர்க்கத்தைப் பின்பற்றுகிறார்களே, அவர்களிடம் இல்லாத நேர்மையாவது இவர்களிடம் இருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது கதையைக் கேளுங்கள்: தமிழ் நாட்டில் உள்ள நிலங்களின் பெரும் பகுதி மிராசுதார்களுக்குத்தான் சொந்தம். நாளெல்லாம் உழுது பாடுபடும் விவசாயிகள் பெரும்பாலும் வாரதாரர்களாகவோ, குத்தகைதாரர் களாகவோதான் இருப்பார்கள். இவர்களுக்குக் குடி வார பாத்தியதை கிடையாது. மிராசுதார்கள் நினைத்தால் இவர்கள் அத்தனை நாளும் உழுது பண்படுத்திய நிலத்தை விட்டுவிட்டு ஒட வேண்டியதுதான்! மிராசுதார்களிடமிருந்து நிலத்தை வாரத்துக்கு எடுத்துக் கொண்டாலும் சரி. மொத்த விளைச்சலில் நூற்றுக்கு இருபது பங்குகூட விவசாயிக்குக் கிடையாது.