பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வேலை நிறுத்தம் ஏன்? ஆகவே, என்ன இருந்தாலும் தாங்கள் பொதுஜனச் சேவகர்கள் என்பதைக் காங்கிரஸ்காரர்கள் மறந்துவிடக் கூடாது தொழிலாளிகளுக்குத் துரோகம் செய்வதன் மூலம் பொதுஜனச் செல்வாக்கை இழந்துவிடக் கூடாது. இப்பொழுது போகிற போக்கிலேயே போனால் மேற்கூறிய நிலைமையைக் காங்கிரஸ் அடைவதற்கு அதிக நாட்கள் பிடிக்காது. மாகாணங்களில் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள், உடனே தங்கள் கொள்கையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமுமாகும். அதிலும் சென்னைப் பிரகாசம் சர்க்கார் இந்த விஷயத்தில் காலதாமதம் செய்யவே கூடாது. தொழிலாளிகளுடைய நலனுக்காக அவர்கள் தங்களுடைய கொள்கையை மாற்றிக் கொள்ளா விட்டாலும், தங்களுடைய சுயநலத்திற்காகவாவது மாற்றிக் கொள்ள வேண்டும், ! இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, வாழ்க்கையில் சொல்ல வொண்ணாத துயரத்துக்கு ஆளாகும் தொழிலாளியிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதமான சங்கத்தைக் கலைப்பதற்கும், முதலாளிகளின்