பக்கம்:வைணவ உரைவளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வைணவ உரைவளம் வும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கேடான நிலைமை வருவதற்கு முன்னே யசோதையின் வடிவு கொண்டு தன்னைக் கொல்ல வந்த பூதனையின் முலையின் வழியாக அவளுடைய உயிரை மீதியின்றிப் பருகின எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற பதரிக்குச் சென்று வனங்குவோம் வாருங்கள்' என்று அன்பர்களை அழைக்கின்றார். கோல்துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் ஒர் ஐதிகம்: நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற்கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது, ஒ திரி தண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்ற பொருளையுடைய மந்திரத்தை (ஸ்கா மா கோபாய) உச்சரிக்க வேண்டும் என்று கேட்டு, எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலையுடையவரையும் பேரறிவுடையவரையுமுள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டியிருக்க அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ங்னம் சொல்லும் படியாக நேர்ந்ததே' என்று சாதித்தாராம். சாத்திர விதிப்படி கோலைத் துணைகொள்ள வேண்டியது அங்கு; கிழத்தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்ற லற்றமையினாலே. இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கின்ற நாளிலே ஒரு கைசிக துவாதசி யன்று பட்டர் பிரம்மரதத்தில் எழுந்தருளித் திருவீதி யலங்கரிக்கப் புறப்பட்டவாறே நஞ்சீயரும் பூரீபாதம் தாங்கப்புக, உத்தமாச்ரமியாய் திரிதண்ட தாரியான உமக்கு இக்காரியம் தகாது" என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர், "எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்' என்கின்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்ட இந்த முக்கோல்தானே இன்று எனக்கு விரோதியாகின்றதோ? இக்கோல் எனக்குத் துணை யல்லவோ? சொரூபரட்சணத்துக்கு இக்கோல் இடையூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/103&oldid=920703" இலிருந்து மீள்விக்கப்பட்டது