பக்கம்:வைணவ உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 1 3 இது வரலாறு : ஒரு சமயம் மாலை நேரத்தில், பொழுது சாயும் தருணத்தில், வானம் திடீரென்று இருண்டது. அந்த இருள் உலகத்தைக் கருந்திரையிட்டு மறைத்தது. அத்துடன் நல்ல மழையும் பொழிந்தது. மழையில் நனைந்து கொண்டே வந்த பெரியோர் ஒருவர் ஒர் இல்லத்தில் மழைக்காக ஒதுங்கவும் இரவு நேரத்தைக் கழிக்கவும் இடம்கேட்டார். வீட்டுக்காரர் இடைக் கழியைக் காட்டி அதில் ஒருவர் படுக்கலாம்" என்று கூறி இடங் கொடுத்துக் கதவினைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய்ப் படுத்துக் கொண்டார். இவர்தான் யொய்கையாழ் வார். மழையோ விடாமல் பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே வீட்டில் தங்க இடம் கேட்டார். பொய்கையார் ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம் என்று கூறிக் கொண்டே வந்தவருக்கு இடம் கொடுத்தார். இவர்தான் பூதத்தாழ்வார். மேலும் சிறிது நேரம் கழித்ததும் மூன்றாவதாக மற்றொருவர் அதே வீட்டிற்கு வந்து ஒதுங்க இடம் வேண்டினார். இடைக் கழியிலிருந்த இருவரும் ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்; என்று கூறிக் கொண்டே அவரையும் அழைத்துக் கொண்டனர். இப்போது வந்தவர் பேயாழ்வார். இன்கவி பாடும் பரம கவிகளாகிய இம் மூவரும் இறைவனுடைய திருக்குணங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய வண்ணம் இருந்தனர். இவர்கள் மூவரும் ஒருவரை யொருவர் முன்பின் அறியாதவர்களே. இந்நிலையில் குரல் கொடுக்காது இசையவும் பெறாது நான்காமவராக யாரோ ஒருவர் நுழைந்து விட்டார். நெருக்கத்தினால் இது தெரிந்தது. இப் புதியவரைத் தெரிந்து கொள்ள அந்த இருட்டிலும் மழையிலும் விளக்கு 30. இக்காலத்திவ் இதனை ரேழி' என்றுவழங்குவர்; வாயி லுக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட ஒடுக்கமான இடம். வடமொழி யில் இது தேஹளி'என வழங்கப்பெறும். 8 سبيس ، له 0ته

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/138&oldid=920741" இலிருந்து மீள்விக்கப்பட்டது