அறிமுகம் ைெவணவம்,உரைவளத்தால் ஏற்றம் பெற்றது என்றும், சைவம் சாத்திரவளத்தால் சிறப்புற்றது என்றும் பல பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்த உண்மை இரண்டு சமயங்களைப்பற்றியும் அறிந்து கொள்ள முயன்ற அடியேனுக்குத் தெளிவாகப் புலனாகின்றது. பின்னதை விளக்க இங்கு இடமில்லை; முன்னதை விளக்குவது இந்நூலுக்கு இன்றியமையாததாகின்றது. திருமால் திருவருளால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருள்மிக்குப் பாடிய இன்தமிழ் பாக்களே நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதனுள் திகழும் திருப்பாசுரங்கள் ஒவ்வொன்றும் செவிக்கினிய செஞ் சொல்லாலாயது: சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்தது: பிறவித்துயரறுத்து அந்தமில் பேரின்பத்தை அளிக்கவல்லது. இவ்வாற்றான் ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு நூல் எனத் தக்க மாட்சிமையுற்றிருத்தலால் 'நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்' என்று வழங்கலாயிற்று. இவ்வரிய நூல்-ஆழ்வார் அருளிச் செயல், திவ்விய பிரபந்தம், பூரீகோசம் என்றும் வழங்கப்பெறும். இது மக்களின் கீழ்மையை யகற்றி மேன்மையளிக்கும் மறையாய் விளங்குதலின் இதனைத் தென்மொழி மறை' என்பர் சான்றோர். உரையாசிரியர்கள் : திவ்வியப் பிரபந்தங்களையும் அவற்றின் பொருள் சிறப்புகளையும் ஆழ்வாரிடம் நேரில் பெற்று அவற்றை உலகில் பரவச் செய்தவர் நாதமுனிகள். ஆதலின், அப் பெரியாரையே முதல் உரையாசிரியராகக் கொள்வது வைணவ மரபு. அவர் முதலாக வந்த அவ்வுரை உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் (நாத