பக்கம்:வைணவ உரைவளம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 வைணவ உரைவளம் பெருமாள்' என்று நினைத்திருக்கவுமாக வேணும்' என்று வேண்டிக் கொண்டார். ' ஐதிகம்.3 : :: என்திருமகள் சேர்மார்பனே என்னும்' என்று ஒருவாக்கியமாகவும், ' என்னுடைய ஆவியே என்னும்" என்று மற்றொரு வாக்கியமாகவும் கொள் வதும் தவிர, முதலடி முழுவதையும் ஒரே வாக்கியமாகக் கொள்வதும் உண்டு. பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யு மவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச் செய்தே இத் திருவாய்மொழி இயலைக் கேட்டருளா நிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே என் திருமகள் சேர்மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்' என்று இயலைச் சேர்த்தருளிச் செய்ய, அதனைக் கேட்டுக் கையுதறி பூரீரங்கந்தl' என்று அணை யிலே சாய்ந்தருளினார் பட்டர் என்று அருளி செய்வர். :அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு 'இவர்க்கு ப் பகவானை அடைவது அணித்தா கிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்' என்று சீயர் அருளிச் செய்வர். பட்டர் பூரீரங்கேச புரோகிதராகையாலே அடிக்கடிப் பகவத் சந்நிதியிலே உபந் யாசங்கள் செய்தருள நேரும். அதற்காக முன்பே நஞ்சீயரை அழைத்து அருளிச் செயல் பாசுரங்களைச் சொல்லவிட்டுச் செவிக்கு இனியதாகக் கேட்பது வழக்கம். அமுது செய்து கொண்டே ஒருநாள் கேட்டருளா நின்றார். அப்போது இயல் சேவிக்கின்ற நஞ்சீயர் இப்பாசுரத்தைச் சேவிக்கும்போது என் திருமகள் மார்பனே என்னும்' என்கிற இடத்தில் நிறுத்தாமல் ஒரே மூச்சில் முதலடியை முழுதும் சொல்லி நிறுத்தினாராம். "என்னும் என்பதற்கு என்று சொல்லுகின்றாள்' என்ற 10. வேண்டிக் கொண்டார் என்பது மாதர் மைதிலி' என்ற சுலோகத்தில் வேண்டிக் கொண்டார் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/471&oldid=921292" இலிருந்து மீள்விக்கப்பட்டது