பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்





திரளுறு வரியினும் அதிகமாய்ப் புவிமான்
தடுக்கிட மிடைகுவா ரன்றே.

என்பவை அவை.

இவற்றின்பின் அவந்தி தேசத்தின் கம்பளக் கிராமத்தில் பார்ப்பனர் குலத்தில் விண்டுசித்து’ என்பவன் மகனாய்க் கற்கி பிறப்பான். அவன் தங்கையானவள் கயவர்களை அழிப்பாள். கலியுகம் நீங்கும். கிரேதாயுகம் பிறக்கும். தரும வழியில் நிற்கும் மனிதர்களே எஞ்சுவார்கள். இவ்வாறு கதையை முடித்துப் பின் பாகவதம் வந்த வழியையும் சொல்லுகிறார். அனந்தன் முதலாக விதுரன் வரை சொல்லப்பட்டது என்கின்றார்.

மீன் முதலாக தெய்வத்தன்மை பொருந்திய கிருஷ்ணாவதாரம் வரையில் வளர்ந்து அபிவிருத்தியடைந்த அவதார முறை, அடுத்ததாகிய குதிரை வடிவமுடைய கல்கியவதாரத்தில் கீழிறங்கி விடுகின்றது. இனி வரப்போவதையும் வரையறை செய்து புராணங்கள் உணர்த்துவது இன்று படிக்கும் நமக்கு பெரு வியப்பாய் உள்ளது.இதை நாம் புரிந்து கொள்வது எளிதன்று. உலகத்தில் இறுதி ஊழியிலே கடவுள் குதிரையாக வந்து, அதர்மம் எல்லாம் அழியச் செய்து தருமம் மீண்டும் புதிய யுகத்தில் தலையெடுக்கச் செய்கின்றார். அணு யுகத்தையும் அணுச்சக்தி ஒரே விநாடியில் பல லட்சம் மக்களை அழித்த உண்மைநிகழ்ச்சியையும் நேரில் உணர்ந்த நாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கப் போவதைப் புராணத்தில் படிக்கும்போது சிறிது சிந்திக்கவே செய்வோம். பறக்கும் தட்டுகள் பூவுலகில் பறக்கின்றன. சிலர் கண்டார்கள். இவை பூவுலகத்துக்குச் செவ்வாய்க் கோளிலிருந்து வருபவையோ என்ற அச்சம் அமெரிக்க அறிவியலறிஞர்களின் மனத்தில் உள்ளது. பூவுலகில் தெரிந்த எந்த ஆற்றலும் அப்பறக்கும் தட்டுகளைப் பார்க்க இயலவில்லை. ஒருக்கால் இது கல்கியவதாரத்தின் முன்னோடியாக இருக்கலாம் அல்லவா? எவராலும் அறிந்து சொல்ல இயலவில்லை.

காலம்: நூல் அரங்கேறிய காலத்தை 'திருவரங்கப்படலம்’ 154-ஆம் பாடல் திட்டமாய்க் குறிப்பிடுகின்றது.

66