பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


என்று பல உறுப்புகளையும் சுட்டிக் கூறுகின்றார். ஒரு பாடல்;

நாவார வேபுகழ்ந்து
நாராயணா நமவென்று
ஒவா உரையினொடுங்
கண்ணீ ரெம்நனைப்ப
காவார் மலர்பறித்துக்
கண்ணாகிநின் காற்கமலந்
துர்வாதார் கையினையும்
கையென்று சொல்வாரோ?[1]

அடுத்து இங்கு சித்திரகவிகள் பலவற்றையும் அமைத்துள்ளார். கொம்பும் காலும் ஒன்றும் இன்றி வந்த நிரோட்டகம், அதில் பிற வகைகள், மடக்குகள், வல்லினம், இடையினம், மெல்லினத்தால் வந்த பாடல்கள் முதலியன இங்குக் காணப்பெறும். திருவாராதனச் சருக்கம் திருமாலின் பூசைக் கிரியைகளை விரிவாகக் கூறுகின்றது. துணைப்படை வதைப்படு சருக்கம் என்பது போரின் வருணனை. மக்கள் செல்வம் பற்றிப் பெருங்கவிஞர் அனைவருமே பாடுகின்றனர். இவரும் பாடுகிறார் (2550);

மைந்தர் மூரல்வாய் முத்த
முண்ணாவாய் வாயோ
மைந்தர் சொற்கொளாச் செவிகளுஞ்
செவிகளோ, மழலை
மைந்தர் சீரடிச் சுவடுழா
மார்புமோர் மார்போ,
மைந்தர் காட்சி கண்டின்புறாக்
கண்களும் கண்மலரோ

நூலெங்கும் சந்தப் பாடல்கள் நிரம்ப அமைத்துள்ளார். இவர் அருணகிரியார் திருப்புகழை அதிகம் பயின்றவர் போலும். அதே அமைப்பில் பல இடத்தும் பாடல்களை அமைத்துள்ளார்.


  1. 27 சிலப்பதிகாரத்திலுள்ள நாவென்ன நாவே, செவியென்ன செவியே’
    என்று முடியும் பாடல்களை நினைக்கச் செய்கின்றது.
76