இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வை.பு.இ.கூதற்புராணம்.
பூதவிநோத நம்பி கோதமனார் மடந்தை
- பூதல மேல்விழுந்த துயரேதீர்
பாதவிநோத நம்பிபூமகன் மேவுநம்பி
- பார்மகண் மேவு நம்பி னுறவோர்சோ
வேதவிநோத நம்பி யாடகனி வாயுண்ட
- வீரவிநோத நம்பி குழல்வாய்வேய்
நாதவிநோத நம்பிசீர் புகழ்வாய் மையன்பர்
- நானில மீது வந்து பிறவாரே
(2600)
நீதிப்புராணமறை போதில் போதமவை
- நேசித்த கேள்வியவை வழியாயே
சோதி சொருப ரூபத்த ராகியொளிர்
- சோபைப் பொன் வீடுதனி . . . . .
னாதிப் பிரானெனவு மாழிப் பிரானெனவும்
- ஆசைப் படாமலுன தடிபேணார்
சாதித்த தேவரடி பூசிப்பதா லுறுதி
- சாதிப்ப தேதிவர்கள் அறியேனே
(2619)
என்பன காண்க.
மதுரை மாநகரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கூடலழகர் கோயிலுக்குரியது இந்தப் புராணம்; ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. இஃது 16-ஆம் நூற்றாண்டுக்குரியது. இந்நூல்பற்றிய விவரங்களை ஈண்டுக் காணலாம்.
கூடல்: கூடலழகர் திருக்கோயில் மதுரை மாநகரில் உள்ளது. இது 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்று. இத்திருக்கோவிலுக்கு இரண்டு பாசுரங்கள் உள்ளன. ஒன்று பெரிய திருமொழி 9.2:5; மற்றொன்று நான்முகன் திருவந்தாதி 39.
77