பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அழகைத் துறந்த அணங்கு அழகு என்பது ஒரு பண்பு. இதனே எய்த விழையாதவர் எவரும் இலர். இது செயற்கை அழகு, இயற்கை அழகு என இரு பாலாகி இயலும் என்ப. இயற்கை அழகு எய்தப் பெருதவர் செயற்கையா லேனும் அதனே ச் சேர விழைவர். அத்தகைய அழகு ஆண் பெண் என்னும் இரு பால்களுள் பெண்பாலரே மிகுதியும் பெற்றவர். அஃது அவர்கள்பால் இயற்கை யில் அமைந்த ஒரு தனி இயல்பு. அதேைலயே அவர் மாதர் என்னும் மாபெருஞ் சொல்லாலும் குறிக்கப் பெறுவார் ஆயினர். மாது என்னும் குற்றுகரச் சொல், மாதர் என்னும் ஈற்றுப் போலிச் சொல்லாக அமைந்து வழங்கப்படுகிறது. மாது என்பது அழகு என்னும் பொருளுடைய சொல்லாகும். ஆகவே, மாதர்கட்கே இயற்கையில் அமைந்த அழகினைத் துறத்தல் என்ருல், அஃது எத்துணேச் சீரிய குணம் என்று சிந்திக்க வேண்டாவோ ? அவ்வாறு துறந்த தூய்மையர் யாரேனும் உளரோ எனில், உளர் என் பதை உணர்த்தவே இக் கட்டுரை எழுந்த தென்க. கால்வகைக் குடிகளில் வணிகர்குடி வளமான குடியாகும். இக்குடியினருள் முப்பிரிவினர் உண்டு. அவர்களே இப்பர், கவிப்பர், பெருங்குடி என்று பெரி யோர் பகுப்பர். இப்பகுப்பு அவர் அவர் செல்ல கிலேயால் அமைந்ததே அன்றி, வேறு காரணத்தால் அன்று. இப்பரினும் கவிப்பர் செல்வர். கவிப்பரி னும் பெருங்குடி மக்கள் பெருஞ் செல்வர். இப்பெருங்குடி மரபில் தனதத்தனர் என்னும்