பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி ராவ்பகதூர் தணிகைமணி, வ. சு. செங்கல்வராயபிள்ளை M.A., இயற்றியது காப்பு மும்மைப் புவனங் களை முன் புதவும் அம்மைப் புகழ்சொல் அநுபூதி சொலச் செம்மைக் கதையைச் சிலைமீ தெழுதும் எம்மத் திமுகத் திறையென் துணையே. (உரை) மூன்று உலகங்களையும் முன்பு ஈன்றவ ளாகிய தேவியின் திருப்புகழைக் கூறும் இந்த அநுபூதி நூலைப் பாடுதற்குப் பாரதக் கதையை மேரு மலையில் எழுதிய எமது யானைமுகக் கடவுள் எமக்குத் துணை புரிவார். * -- (குறிப்பு) மும்மை-மூன்று; செம்மைக் கதை-பார தம்; சிலை-மேருமலை; எம் அத்தி முகத்து இறை - யானை முகப்பிரான்- கணபதி. தே. அ. 1