பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

75


★ தமிழ் நாட்டுக் குழந்தைகளும், அவரவர் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்து தலைமயிரை மழித்து விடுதல், அன்று தொட்டு இன்று வரை உள்ள மரபு.

★ தமிழர்கள் முற்காலத்தில் தலையை மழித்துச் சிறிய குடுமி மட்டும் வைத்திருந்தார்கள். அதனால் சூரியன் வெப்பம் பட்டு எலும்பு கடினமாகும். இதை இயற்கை மருத்துவமாக எண்ணினார்கள். சூரிய வெப்பம் படாத செடி, கொடிகள் வளருவதில்லை என்பது தமிழரின் எண்ணமாகும்.

★ யாராவது செய்கின்ற உதவியை தமிழர்கள் மறப்பதில்லை. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறள் தமிழர் நெறியாக இன்றும் அன்றும் இருக்கின்றது.

★ ஆசியா, ஐரோப்பா, லிபியா என்று பெண்பால் பெயர்களை மேல் நாட்டார் வைத்துக் கொண்டார்கள். ஆனால் அதற்கு முன்பே தமிழர்கள் பூமியைப் பெண் என்றும், அவர்கள் நாட்டைத் தாய் நாடென்றும், இங்கே ஓடும் நதிகளைக் காவிரி, பொன்னி, யமுனை, கங்கை, கோதாவரி, சோனை என்றும் பெண்களது பெயரையிட்டே அழைத்த வருகிறார்கள்.

★ இந்திய நாட்டினர் வில்லையோ, மரக்கோலையோ கையில் வைத்துக் கொண்டு குறி, ஜோசியம் சொன்னதுபோல, தமிழ் நாட்டு மலைவாழ் பெண்கள் அந்த நாட்டின் பழக்கத்துக்கு முன்னரே, தங்கள் கையில் சிறுகோலை வைத்துக் கொண்டு குறி சொல்லும் வழக்கம் அன்றும் இன்றும் இருப்பதைப் பார்க்கலாம்.

★ தமிழ்ப் பெண்களும், இந்தியப் பெண்களும் இன்றும் தங்கள் கால்களில் கொலுசு, காப்பு அணிந்து கொள்ளும் பழக்கத்தையே மேல் நாட்டாரும் அணிந்து கொண்டிருந்தார்கள். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று.