ஹெர்க்குலிஸ்
41
ஓடும்படி செய்தான். பின்னர் ஆஜியஸைப் பார்ப்பதற்காக அவன் அரண்மனைக்குச் சென்றான்.
அதற்குள், அவன் யூரிஸ்தியஸின் ஏவலின் பேரிலேயே வந்து தொழுவங்களைச் சுத்தம் செய்தான் என்பதை எவரோ வழிப்போக்கர் மூலம் தெரிந்துகொண்டிருந்தான் ஆஜியஸ். ஹெர்க்குலிஸ் அவனைக் கண்டு, என் வேலை முடிந்தது. உங்கள் பரிசுதான் பாக்கி என்றான்.
பரிசை ஆற்றுக்குத் தான் கொடுக்க வேண்டும்! நீயா தொழுவங்களைச் சுத்தம் செய்தாய்? ஆறல்லவா சுத்தம் செய்தது?” என்று கேட்டான் மன்னன் சிறிது நேரத்திற்குப்பின் அவன் தான் பரிசுபற்றி ஹெர்க்குலிஸிடம் ஒப்பந்தம் எதுவுமே செய்து கொள்ளவில்லையென்றும் கூறிவிட்டான்.
ஹெர்க்குலிஸ், சில பெரியோர்கள் முன்பு விஷயத்தைத் தெரிவித்து, அவர்களை முடிவு கூறும்படி கேட்க வேண்டும் என்று தெரிவித்தான். அவ்வாறு சில நடுவர்கள முன்பு, மன்னன் தன் கால்நடைகளில் பத்தில் ஒரு பகுதியை ஹெர்க்குலிஸுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த வாக்குறுதியைப் பற்ற ஹெர்க்குலிஸ் பேசி முடிந்ததும்,