இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருச்சியில் மாணவர் வரவேற்பு
வண்டியில் ஏறவும் மாணவர் அநேகர்
அண்டிவந் தென்னுடன் அன்பொடு பேசினர்.
பதிலுரை கூறியான் படுத்துநன் குறங்கிக்
கதியுடன் ஈரோட்டில் கால்சுத்தி செய்து
போத னூரில் புதியன உண்டு
கோதிலாக் கோயமுத்தூர் கூடவும்
அநேகர் ஸ்டேஷனில் அவாவியெனை நின்றனர்.
அநேக போலிஸார் அவணின்று வந்தெனை
வண்டியின் மறுபுறம் வாவென் றிறக்கியோர்
வண்டியில் ஏற்றி வலனொடு *சென்றால்
சிறைக்குட் சேர்த்தனர். செப்புவேன் பின்னர்ச்
சிறைக்குள் நிகழ்ந்தவும் தெரிந்தவும் யாவுமே.
111
111