பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உரிய மனம் போல வாழ்வு. தன் நாளுக்குனான் பரிணமித்து விடுத்தியாகின்ற பிய ணியானதால், மனிதன் கற்றக்கும் விர்த்தியா தற்கும் நிலைமையில் இருக்கிறான். ஒரு சந்தர்ப்பத், தால் அவன் பெறலான ஆன்ம போதத்தை அவன் கற்றதும், அது நீங்கி வேறு சந்தர்ப்பங்கள் ஏற்படு கின்றன. தான் புறநிலைமைகளுக்கு உட்பட்டவனென்று எவ்வளவு காலம் நம்பிக்கொண்டிருக்கிறானோ, அவ்வ ளவு காலமும் மனிதன் புறநிலைமைகளால் மொத்துண் டுதிரிகிறான் ; ஆனால், தான் சிருஷ்டி செய்யும் ஓர் சக்தியென்றும், நிலைமைகள் உண்டாவதற்குக் காரண மான நிலமும் வித்துக்களுமாகிய அந்தக்கரணத்தைத் தான் அடக்கியாளலாமென்றும், எப்பொழுது அவன் உணர்கின்றானோ, அப்பொழுதே அவன் தனக்கு நியா யமான தலைவனாகின்றான். தன்னை அடக்கியாள் தலை யும் தன்னைப் பரிசுத்தப்படுத்தலையும் சிறிது காலமா வது அப்பியசித்துவந்த ஒவ்வொரு மனிதனும், நினைப் பிலிருந்து நிலைமைகள் வளர்கின்றன என்பதைத் தெரி வான்; ஏனெனில், தனது அகநிலைமைகள் எவ்வளவுக்கு எவ்வளவு மாறுபட்டனவோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது புறநிலைமைகளும் மாறுபட அவன் கண்டிருப் பான். தனது ஒழுக்கத்திலுள்ள குறைகளை நீக்குதற் உண்மையுடன் முயற்சிசெய்து விரைவாகவும் விசேஷமாகவும் விர்த்தியாகுங் காலையில் மனிதன் ஒன் றன் பின் ஒன்றாகப் பல நிலைபைகளை அடைகின்றான். காக 2-1