பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. அறைகளுக்குள் காற்றும் வெளிச்சமும் வரான் மாகச் சென்றாலன்றி உங்கள் வாசஸ்தலம் இன்பத்தை யும் சுகத்தையும் நல்காது, உங்கள் அகத்துன் சந்தோ ஷமும் நல்லெண்ணமும் சாந்தமும் பொருந்திய நினைப்புக்களைக் கொண்டாலன்றி, உங்கள் சரீரம் ஆரோக்கியமும் உரமும் பெற்றிராது: உங்கள் முகம் பிரகாசமும் அழகும் இனிமையும் பொருந்தியிராது. வயோதிகர்களுடைய முகங்களில் இரக்கத்தால் உண்டான திரைகளும், பலமும் பரிசுத்தமும் பொருத் திய நினைப்பால் உண்டான திரைகளும்,காமக்குரோ தங்களால் உண்டான திரைகளும் இருக்கின்றன; இவற் றைப் பிரித்து அறியமாட்டாதார் யார்? நல்லொழுக் கத்தில் வாழ்நாளைக் கழித்தவர்களுக்கு, விருத்தாப்பிய தசை, அஸ்தமிக்கும் சூரியனைப் போன்று, சாந்தமும் சமாதானமும் இனிமையும் பொருந்தியிருக்கும். யான் சில காலத்துக்கு முன்னர் ஒரு தத்துவஞானியை அவரது மரணப்படுக்கையில் பார்த்தேன்; வயது முதிர்ந்ததே பன்றி, அவருக்கு விர்த்தாப்பியம் உண்டா கவில்லை; அவர் எவ்வளவு இன்பத்தோடும் சமாதானத் தோடும் வாழ்ந்திருந்தனரோ அவ்வளவு இன்பத்தோ டும் சமாதானத்தோடும் இறந்தனர். சரீரத்தின் வியாதிகளை நீக்குவதற்கு மனஉற்சாக முள்ள நினைப்புக்குச் சமமான வைத்தியன் இல்லை; கவலையையும் துக்கத்தையும் போக்குதற்கு நன்மனம் போன்ற நட்பு வேறில்லை. ஒருவன் பகைமையும் 44