பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும். கொண்டவன் பிணிப்பூச்சிகளுக்குப் பயப்படவேண் டிய நிமித்தம் இல்லை. நீங்கள் உங்கள் சரீரத்தைப் போற்ற விரும்பு வீர்களாயின், உங்கள் மனத்தைப் போற்றுங்கள்; உங் கள் சரீரத்தைப் புதுப்பிக்க விரும்புவீர்களாயின், உங் கன் மனத்தைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பகை மையும் பொறாமையும் ஆசாபங்கமும் ஏக்கமும் பொருந் திய நினைப்புக்கள் சரீரத்தினின்றும் அதன் ஆரோக் கியத்தையும் அழகையும் பறித்துக்கொள்கின்றன. கடு கடுத்த முகம் இயற்கையாக உண்டாவ தன்று; அது கடுகடுத்த நினைப்புக்களாலேயே உண்டாகிறது. முகத் தின் அழகைக் கெடுக்கும் திரைகள் மடமையாலும் காமக்குரோதங்களாலும் கர்வத்தாலும் உண்டா கின்றன. வய யான் தொண்ணூற்றாறு வயதுள்ள ஒரு ஸ்திரீயை அறிவேன்; அவளுடைய முகம் பன்னிரண்டு துள்ள ஓர் பாலிகையின் முகத்தைப்போலக் குற்ற மற்றதாகவும் பிரகாசமுள்ளதாகவும் விளங்குகின்றது. யான் ஒரு யௌவன புருஷனை அறிவேன்; அவனு டைய முகம் ஓர் வயோதிகனுடைய மூகத்தைப்போல மிகவும் அந்தவிகாரமாயிருக்கிறது. இவற்றில் ஒன்று பிரகாசமும் இனிமையு முள்ள மனவிர்த்தியின் பயனாக உண்டாயிருக்கிறது; மற்றொன்று காமக்குரோதமும் அதிருப்தியு முடைய மனவிர்ததியின் பபனாக உண்டா யிருக்கிறது. 43 று