பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம் போல வாழ்வு. மனிதன் உயர்கிறான்; சிற்றின்பஇச்சை, சோம்பல், மனத்தீமை, அசுசி, மனக்குழப்பம் என்பவற்றால் மனி தன் தாழ்கிறான். ஒருவன் இவ்வுலகத்தில் மிகவுயர்ந்த ஸ்தானத் திற்கும் ஆன்ம உலகத்தில் மிகவுயர்ந்த பதவிகளுக் கும் உயரலாம். பின்னர் கர்வமும் சுயநயமும் அயோக் கியதையும் பொருந்திய நினைப்புக்களுக்கு கொடுத்துப் பலஹீனமும் துன்பமும் நிறைந்த நிலை களுக்குத் தாழலாம். டம் நியாயமான நினைப்பால் பெறப்பட்ட வெற்றிகளை எச்சரிக்கையோடு போற்றிக் காக்கவேண்டும். வெற்றி பெறுகிற சமயத்தில் அங்ஙனம் செய்யாமல் அநேகர் திரும்பவும் தோல்வி அடைகின்றனர். தொழிலுலகம் புத்தியுலகம் ஆன்மவுலகம் இவற் றில் எதிலானாலும் பெறுகின்ற சித்திகள் குறித்த வழிகளில் சரியாகச் செலுத்தப்பட்ட நினைப்பின் பய னாகக் கிடைக்கின்றன: அவை யெல்லாம் ஒரே நியதி யால் ஆளப்படுகின்றன: அவையெல்லாம் ஒரே தன்மை யனவா யிருக்கின்றன ; வித்தியாசமெல்லாம் பெற்ற பொருளில் உள்ள வித்தியாசமே. சிறிய சித்தி பெற விரும்புகிறவன் சிறிது கஷ்டப்படல்வேண்டும்; பெரிய சித்தி பெற விரும்புகிறவன் பெரிது கஷ்டப்படல் வேண்டும்; அதி உன்னதமான நிலையை விரும்புகிறவன் அதிகமாகக் கஷ்டப்படல் வேண்டும். 56 அடைய