பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

கின்றது; அதனால் முடிவும் அழிவும் இல்லாதஅமை தியையும் சுகத்தையும் அடையலாம். இப்பெரும் பே ற்றை அடையச் செய்யும் மார்க்கத்தின் தொடக்கம் துன்பத்தின் தன்மையைச் சரியாக அறிதலேயாம்.

துன்பத்தை வெறுத்தலோ கவனியாதிருத் தலோ போதாது; அதனை அறிய வேண்டும். துன்பத் தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்தல் போ தாது ;அஃது எதன் பொருட்டு வந்திருக்கிற தென்றும், அஃது எதனை உங்களுக்குக் கற்பிக்க நிற்கிறதென்றும் நீங்கள் அறியவேண்டும். உங்களைப் பந்தப்படுத்துகிற விலங்குகளைப் பார்த்து நீங்கள் பெருமூச்சு விடுவதாலும் சத்தமிடுவதாலும் அழு வதாலும் யாதொரு பயனும் இல்லை; அவை எதற் காக உங்களைப் பந்தப்படுத்தி யிருக்கின்றன வென்றும், அவை எவ்வாறு உங்களைப் பந்தப் படுத்தி யிருக்கின்றன வென்றும். நீங்கள் அறிய வேண்டும். ஆதலால், நண்பர்களே! நீங்கள் உங்க ளுக்கு அந்நியராக நின்றுகொண்டு,நீங்கள் உங்களை ஆராய்ந்தறிதற்குத் தொடங்கவேண்டும்; அநுபவம் என்னும் கலாசாலையில் நீங்கள் கீழ்ப்படிதலில்லாத மாணவராயிருப்பதை விட்டு, நீங்கள் பணிவோடும் பொறுமையோடும் உங்கள் அபிவிர்த்திக்கும் பூர ணத்துவத்திற்கும் அத்துன்பம் கொண்டிருக்கும் பாடங்களைக் கற்கத் தொடங்கவேண்டும். ஏனெ னில், துன்பமானது சரியாக அறியப்பட்ட காலை யில் அது பிரபஞ்சத்தில் அளவற்ற ஒரு சக்தியன்