பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு பார்க்கம். இடைஞ்சலும் நேரிடாத ஓர் அரங்கிற்காவது செல் லுங்கள் ; அவ்விடத்தில் நீங்கள் சௌகரியமாக உட் கார்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையில் உங்க ளுக்குச் சந்தோஷத்தையும் இன்பத்தையும் கொடுக் கிற ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டு, உங்களுக்குக் கவலையைக் கொடுக்கிற விஷ பத்தினின்று உங்கள் மனத்தைப் பலவந்தமாக நீக்கி விடுங்கள் ; சிறிது நேரத்துள் அமைதியும். உறுதியு முள்ள ஒரு பலர் உங்கள் மனத்திற்குள் உங்களுக் குத் தெரியாமல் பிரவேசிக்கும் ; உடனே உங்கள் கவலை நீங்கிப் போய்விடும். எந்த நிமிஷத்தில் உங்கள் மனம் கவலையாகிய தாழ்ந்த ஸ்தானத்திற்குக் திரும் புகின்றதோ, அந்த நிமிஷத்திலேயே உங்கள் மனத் தை அதினின்று திருப்பு அமைதியையும் பலத்தை யும் கொடுக்கிற ஸ்தானத்திற்குக் கொண்டு போய் மறுபடியும் அங்கு நிறுத்துங்கள். இதனை நீங்கள் பூாணமாகச் செய்து முடித்த பொழுது, உங்கள் கஷ்டத்தை நிவிர்த்திப்பதற்குரிய வழிகளைச் சிந்திப் பதில் உங்கள் பானத்தை ஏகாக்கிரப்படுத்துங்கள் ; நீங்கள் கவலையாயிருந்த போது உங்களுக்குச் சிக்க வாகவும் நீக்கமுடியாததாகவும் தோன்றிய விஷயம் இப்பொழுது சிக்கற்றதாகவும் நீக்கக்கூடியதாகவும் தோன்றும் ; இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தையும், அதனை ச்செய்தற்குரிய மார்க்கத்தை யும், கவலையும் சஞ்சலமு மில்லாத மனத்திற்கு மாத் திரம் சொந்தமான தெளிவோடும் அறிவோடும் நீர் கள் காண்பீர்கள். நீங்கள் உங்கள் மனத்தைப் பூரண 58