________________
வலிமைக்கு மார்க்கம். உங்கள் அந்தரங்க சக்திகள் வெளிப்படத் தொடங் கும் ; அப்பொழுது நீங்கள் வெற்றியைக் கொடுக்கும் அமைதியோடும் நம்பிக்கையோடும் உங்கள் வேலைகளை செய்து முடிக்கும் சக்தியுள்ளவர்களாவீர்கள். நீங்கள் இப்புதிய சக்தியையும் பலத்தையும் அடைகிற சமயத்திலேயே உங்கள் அகத்துள் "ஆன்மதரிசனம்" என்று சொல்லாநின்ற அகவிளக்குப் பிரகாசிக்கும்; அதன் பின்னர் நீங்கள் இருளில் வழிதெரியாமல் நடக்கமாட்டீர்கள் ; வெளிச்சத்தில் வழிதெரிந்து நடப்பீர்கள். இவ்வான்ம விளக்கம் வளரவளரப் பகுத்தறிவும் நுண்ணுணர்வும் அளவுகடந்து அதி கரித்துக்கொண்டிருக்கும்; அப்பொழுது, எதிர்கால சம்பவங்களையும் உங்கள் முயற்சிகளின் பலன்களையும் முன்னர்க் கூட்டிச் சரியாக அறியத்தக்க ஞான தி ருஷ்டி உங்கள் அகத்துள் வளரும். உங்கள் அகத்துள் எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் மாறுகின்றீர் களோ, அவ்வளவுக் கவ்வளவு உங்கள் புறவாழ்வும் மாறுதலடையும். மற்றவர்கள் சம்பந்தமாக உங்கள் மனப்போக்கை நீங்கள் மாற்றுங் காலையில், உங்கள் சம்பந்தமாகக் கொண்டுள்ள மனப்போக்கையும் நடக்கையையும் அவர்கள் மாற்று வார்கள், நீங்கள் தாழ்வையும் பலஹீனத்தையும் அழிவையும் கொடுக்கும் நினைப்புக்களை ஒழித்த காலையில், பலமும் சுத்தமும் உயர்வும் பொருந்திய மனங்களால் சிருஷ்டிக்கப்படும் உண்மையும் வலிமை யும் ஆக்கமும் பொருந்திய நினைப்போட்டங்களை 64