ளகஅ இன்னா செய்த வறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே."[புறம் - உ ரு ரு] கழிந்தோர் தேத்துக் கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு செத்தோர்மாட்டுச் சாவாதார் வருத்தமுற்றுப் புலம்பிய கையறு நிலையம். உதாரணம்:- காதலி இழந்த உதாரணம்:- தொல்காப்பியம் - இளம்பூரணம் "செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினு முய்வின்று மாதோ பாடுகள் போவக் கைதொழு தேத்தி இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார் உதாரணம்:- மண்டமர்க் கடக்குந் தானைத் திண்டேர் வளவற் கொண்ட கூற்றே." [புறம் - உ.உங] தபுதாரநிலையும் காதலியை இழந்த கணவனது தபுதாரநிலையும். "யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையின் கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே." [புறம் - உ ஒரு ] காதலன் இழந்த தாபத நிலையும் காதலனை இழந்தவள் நிற்கும் தாபதநிலையும். உதாரணம்:-. "அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா வின்னே இனியே, பெருனைக் கொழுகன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே." [புறம் - உசஅ] நல்லோள் கணவனொடு மளி அழல் புக்கு இடையிட்ட மாலை சொல் நிலையும்- கணவனொடு கிழத்தி பெரிய அழற் புகுவழி இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற் றும். "பல்சான் றீரே பல்சான் றீரே செல்மெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தட்கிடை மிடைந்த கைபிழி பிண்டம்