பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்,

ததிவளஞ் செறிந்து போதிதவிற் பலகலை, வல்லோர் புகழு நல்லூ ராளி, நந்தலி னலங்கெழு கந்தவேட் குரிசில், பெரிது வந் துஞற்றிய வரியமெய்த் தவத்தாற், பொறையருள் சுரந்த நிறைகொடை வாய்மையென், றீன்னாற் குணங்க ளோர்' மன்னிய வுருக்கொடு, வந்ததென் றீயாவரும் வழங்கிட வந்தோன், கல்வியங் கடலைக் கடப்பவர் தமக்கோர், சொல்வியன் புனையெனத் துரிசற நிற்போ , னிருவகைப் பிரம் சரியான் னெறியின், மயற்றலை புகுத்தா நயிட்டிக நிலையினன், கற்பனை கடந்த சிற்பாஞ் சுடர்தாள், கனவினு மனவினுங் கழலாக் கருத்தினன், பழிதரு முத்திப் பகுப்பெலா மொருவி, பழிவில்பே ரின்ப மளிக்குது முத்தியை, யெளி தினித் றெரித்துப் பாகிலின் புறுத்துஞ், சவசிக் தாந்த மெய்தரு பனுவலை, பையந் திரிபற வகத்தினன் குணர்த்தோன், கையற விகர்த கருணையங் கடலோன், கூறுசீர் புனையு மாறுமுக நாவலன், பாவிய வுவப்பிற் பதித்தனன், விரவிய வுலகம் விளங்குகற் பொருட்டே.

பொருள். மலர்தலை...புத்தேன்-அகன்ற இடத்தையுடைய பூவுலகில் பொருந்திய உயிர்க்கூட்டங்கள் செய்த வினைகளின் வழியாக எய்திய போகத்தை விரும்பி அனுபவிக்க, குளிர்ந்த பூமாலையை . அணிந்த இமய மலையரசன் மகளை ஒரு பக்கத்தில் விலைபெற வைத்த சிவபிரானது கிருபையின், செடுதற்கு அரிய வலிமையால் எட்டுத் திக்குகளிலும் படர்ந்த உலகப் பரப்பை நொடிப் பொழுதில் தனித் தனியாக மேம்பட வகுத்த, தேனைக் கொண்ட முகப்பை யுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்கு முகங்களாயுடைய பிரமதேவன், வன்படரகன்று தருவான்-வலிய துன்பம் நீங்கி மக்கட் பாப்பெல்

92