பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉசு தொல்காப்பியம் - இளம்பூரணம் கூஎரு. நாயும் பலகையும் வரூஉங் காலை ஆவயி னுகரங் கெடுதலு முரித்தே உகரங் கெடுவழி யகர நிலையும். இது, மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்துப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- நாயும் பலகையும் வரும் காலை - மேல்நின்ற வல் என்பதன்முன் நாய் என்னும் சொல்லும் பலகை என்னும் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, அ வயின் உகரம் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரம் கெடாதே நின்று முடிதலே யன்றிக் கெட்டு முடியவும் பெறும். உகரம் கெடுவழி அகரம் நிலையும் - அவ்வுகரம் கெடு மிடத்து அகரம் நிலைபெற்று முடியும். உ-ம். வல்லநாய், வல்லப்பலகை எனவரும். 'அகரம் நிலையும்' என்னாது 'உகரம்கெடும்' என்றதனால், பிற வருமொழிக்கண் ணும் அவ் அகரப்பேறு கொள்க, உ-ம். வல்லக்கடுமை; சிறுமை,தீமை,பெருமை எனவரும். ௩ எசு. பூல்வே லென்றா வாலென் கிளவியோ டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. (எக) இதுவும், அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-பூல் வேல் ஆல் என் கிளவியோடு அ முப்பெயர்க்கும் - பூல் என்னும் சொல்லும் வேல் என்னும் சொல்லும் ஆல் என்னும் சொல்லும் ஆகிய அம்மூன்று பெயர்க்கும், அம் இடை வரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடை வந்து முடியும். உ-ம். பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். [என்றா என்பது எண்ணிடைச் சொல்.] (அய) ௩ள்ள. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்: தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - லகாரவீற்றுத் தொழிற்பெயரெல்லாம் ஞகாரவீற்றுத் தொழிற்பெயரின் இயல்பினவாய் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும். உ-ம். கல்லுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்: கல்லுக்கடுமை, சிறுமை,தீமை,பெருமை,ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். 'எல்லாம்' என்றதனால், இவ்வாறு முடியாது பிறவாறு முடிவனவும் கொள்க. பின்னல் கடிது, துன்னல்கடிது; பின்னற்கடுமை, துன்னற்கடுமை எனவரும். இன்னும் அதனானே, மென்கணம் வந்தவழி பின்னன்ஞான்றது; பின்னன் ஞாற்சி என மெல்லெழுத்தாய்த் திரிந்து முடிவனவும் கொள்க. (அக)