பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளசடு தொல்காப்பியம் - இளம்பூரணம் 'அக்கிளைமொழி' என்றதனால், பார்ப்பனக்கன்னி, பார்ப்பனச்சேரி என அன் னும் அக்கும் வந்தன கொள்க. (உகர நீட்டம் செய்யுள் விகாரம். 'அக்கிளை' ஆகுபெயர்.] சஉய. எண்ணுப் பெயர்க்கிளவி யுருபிய னிலையும் இது, குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரோடு பொருட்பெயர் முடிக்கின்றது. இ-ள்:- எண்ணுப் பெயர் கிளவி உருபு இயல் நிலையும் - எண்ணுப் பெயராகிய சொற்கள் உருபுபுணர்ச்கியின் இயல்பின்கண்ணே நின்று (அன்பெற்று) முடியும். உ-ம். ஒன்றன் காயம், இரண்டன்காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். (கச) சஉக. வண்டும் பெண்டு மின்னொடு சிவணும். கூறுகின்றது. இது, மென்றொடர்மொழியுள் சிலவற்றிற்குப் பிறமுடிபு கூ இள்:வண்டும் பெண்டும் இன் ஒடு சிவணும் - வண்டு என்னும் சொல்லும் பெண்டு என்னும் சொல்லும் இன்சாரியையோடு பொருந்தி முடியும். உ-ம். வண்டின் கால் பெண்டின் கால் எனவரும். ச௨௨. பெண்டென் கிளவிக் கன்னும் வரையார். இது, மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுத லிற்று. இ-ள்:- பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டு என்னும் சொல் விற்கு (இன்னேயன்றி) அன்சாரியையும் வரையார் [ஆசிரியர்]. உ-ம்:- பெண்டன்கை எனவரும். சஉ௩. யாதெ னிறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த விறுதியு முருபிய னிலையும். (*) இஃது, ஈரெழுத்து ஒருமொழியுள் ஒன்றற்கும் சுட்டுமுதல் ஆய்தத் தொடர் மொழிக்கும் வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய ஆய்த இறுதியும் - யாது என் னும் ஈறும் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபு இயல் நிலையும் - உருபு புணர்ச்சிபின் இயல்யின் (கண்ணே) நின்று சுட்டு முதல் மொழிகள் அன்பெற்றும் ஆய்தம் கெட்டும் முடியும். உ-ம். யாதன் கோடு, அதன் கோடு, இதன் கோடு, உதன் கோடு எனவரும். சிஉச. முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டு மல்வழி யான. இது, மேற்கூறிய ஈற்றுள் சுட்டு முதல் ஈற்று உகரத்திற்கு ஒருவழி அவ்வழி முடிபு கூறுகின்றது. இ-ள்:- முன் உயிர் வரும் இடத்து - (அவற்றுள் சுட்டு முதல் ஆய்தத் தொடர் மொழி உகர ஈறு தன்) முன்னே உயிர் வரும் இடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்