பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சசு தொல்காப்பியம் - இளம்பூரணம். உ-ம். புளிய ஞெரி, நுனி,முரி,யாழ், வட்டு எனவரும். உரையிற்கோட லென்பதனால், புளிய விலை எனவும் உயிர் வருவழிக் கேடும் கொள்க. றஙஉ. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை யின்மை வேண்டும். இஃது, இன் சாரியை முழுவதாஉம் கெடும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (உஅ) இ-ள்:-இன் என வரும் வேற்றுமை உருபிற்கு -இன் என்றுசொல்ல வரு கின்ற வேற்றுமையுருபிற்கு, இன் என் சாரியை இன்மை வேண்டும் - இன் என்னும் சாரியை தான் இன்றி முடிதல் வேண்டும். உ-ம். விளவின், பலாவின் எனவரும். "அவற்றுள் இன்னின் இகரம்" [புணரியல் - கஅ] என்றதன்பின் வையாததனால், சிறுபான்மை இன் சாரியை கெடாதுநிற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேன் எனவரும். ளஙங. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமையுருபு நிலைபெறு வழியும் தோற்றம் வேண்டாத் தொருகிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதா மருங்கின் வழிவந்து விளங்கா திடைநின் றியலுஞ் சாரியை இயற்கை உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும். (2) இது, சாரியைகட்கெல்லாம் பொ.துவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப-பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமை உருபு நிலை பெறு வழியும்-வேற்றுமையுருபு தொகாது நிலை பெற்ற இடத்தினும், தோற்றம் வேண்டா தொகுதிக்கண்ணும் - அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம்தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கோடு பொருந்தி, சொல் சிதர்மருங்கின் - சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்துக்காணுமிடத்து, வழி வந்து விளங்காது இடை நின்று இயலும் - அவற்றின்பின் வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும், சாரியை இயற்கை-சாரியையின் இயல்பு. உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் அவைதாம் உண்டாதலும் இல்லையாதலும் ஒடு உருபினிடத்து ஒக்கும். உ-ம். விளவினைக்குறைத்தான், விளவினைக்குறைத்தவன் எனவும், நிலாத்துக் கொண்டான், நிலாத்துக்கொண்டவன் எனவும் வரும். ஒட்டுதற்கொழுகிய சாரியை பெறாவாயின. வழக்கன்மையின், நிலாக்கதிர் நிலாமுற்றம் என்பன எல்லா நம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின், இடைநின்றி யறல் பெரும்பான்மை யெனக்கொள்க.