பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/சாதி இந்துவின் நன்றி

விக்கிமூலம் இலிருந்து
1
சாதி இந்துவின் நன்றி !


த்துவஞானிகள் அரசர்களாகும் வரையிலும் அல்லது இவ்வுலக அரசர்களும் அரசிளங்குமரர்களும் தத்துவ ஞானத்தின் சக்தியையும் மனப்பான்மையையும் கொள்ளும் வரையிலும். அரசியல் மேதைமையும் ஞானமும் ஒருவரில் சேர்ந்து காணப்படும் வரையிலும், பொதுமக்கள் இரண்டில் ஒன்றை மட்டும் தொடர்ந்து கொண்டு, மற்றதை விட்டு விட்டு இருக்கும்போது. ஒதுங்கி இருக்கக் கட்டாயப்படுத்தும் வரையிலும் நகரங்கள் அவற்றின் கேடுகளிலிருந்து ஒய்வு பெறாது. இல்லை. மனித இனமே ஒய்வு பெறாது என நம்புகிறேன் பிறகே இந்த நமது நாடு உயிர்பெறக் கூடும் வெளிச்சத்தைக் காணக்கூடும்.

இந்த கருத்தை சாக்ரடீஸ் கூறியவுடன் அவருடன் விவாதம் புரியும் கிளாக்கன் பதட்டமடைந்து...

'என்ன கூறிவிட்டாய் சாக்ரடீஸ், கண்ணியமானவர்கள் கூட தங்கள் உடைகளை கழற்றிவிட்டு இதற்காக உன்னைத் தாக்க முழு பலத்தோடு வருவார்கள்...'

என்று பதில் சொல்கிறான்.

பிளேட்டோவின் குடியரசு நூலில் காணப்படும் இந்த விவாதம் இன்று வரையிலும் செயல்படுத்த சாத்தியமற்றதாகவே கருதப்பட்டு வந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

எனினும் பிளேட்டோவின் யோசனை நடைமுறை படுத்தப்படாமலில்லை, பல்வேறு காலகட்டங்களில் அவரின் தீர்க்க தரிசனம் நிறைவேறியுள்ளது. லெனின், மாவோ இதற்கு தகுந்த உதாரணங்கள். நம் நாட்டில் அரசியல் மேதமையும், ஞானமும் வாய்ந்தவர்களில் அம்பேத்கர் முதன்மையானவர். இவரும் அரசு பரிபாலனத்தில் பங்கேற்று நாட்டை வழி நடத்தியுள்ளார். ஆனால் பிளேட்டோ சொன்னதைப் போல ஒரு அரசனாகும் வாய்ப்பில்லாதவராகவே போய்விட்டார் என்றால் யார் குற்றம்? ஒருவேளை வெறும் தத்துவ ஞானியாகவே தன்னை அவர் வெளிப்படுத்தியிருந்தால் பிளேட்டோவின் கனவை நிறைவேற்றியிருக் கலாம். யாரும் அவரை முழு பலத்தோடு எதிர்க்க வந்திருக்க மாட்டார் கள். ஆனால் தீண்டத்தகாதவனாக பிறந்து பிளேட்டோ வரையறுத்த தகுதியோடு இருந்ததால் கிளாக்கனின் கருத்துபடியே எல்லாம் நடந்து விட்டது. சாதி இந்துக்கள் அவரை தத்துவ ஞானியாக அரசியல் மேதையாகப் பார்க்காமல் தீண்டத்தகாதவராகவேப் பார்த்தார்கள்.

இதைப் போன்ற பின்னணியில்தான் பண்டிதரைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. தத்துவ ஞானியாகவும், அரசியல் மேதையாகவும் வாழ்ந்த அயோத்திதாச பண்டிதர் சமூக - அரசியல் களத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். அதனால் இந்த சமூகம் அவருக்கு ஒரு அரசனுக்குரிய இருக்கையைத் தர வேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் நன்றியுடனாவது நடந்து கொண்டிருந்திருக்கலாம். இந்த நன்றிகெட்ட சாதி இந்து சமூகம் செய்தது என்ன என்பது இப்போதும் வெட்ட வெளிச்சமானதுதான்.

இருந்தபோதிலும் பல்வேறு வகையில் புதைக்கப்பட்ட பண்டி தரின் கொடைகளைப் புறந்தள்ளாமல் அதை பயன்படுத்திக் கொண்டு வரும் சூட்சுமம் மட்டும் இன்றும் நின்றபாடில்லை. ஆனால் ஒரு மூர்க்கத் தனத்தோடும், கள்ள மெளனத்தோடும் அவரை எதிர்த்தே வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன்?