பதிற்றுப்பத்து/(புறத்திரட்டு, தொல்காப்பியஉரைகள்)

விக்கிமூலம் இலிருந்து
பதிற்றுப்பத்தில் விட்டுப்போன, முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சார்ந்த
சில பகுதிகள் தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தன.
அவை வருமாறு:
இருங்கண் யானையொ(டு) அரும்கலம் துறுத்துப்
பணிந்துவழி மொழிதல் அல்லது பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உரும்உடன்று சிலைத்தலின் விசும்(பு)அதிர்ந் தாங்குக்
5  கண்அதிர்பு முழங்கும் கடும்குரல் முரசமொடு
கால்கிளர்ந் தன்ன ஊர்திக் கால்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறைஅரும் சீற்றத்து
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
நீர்துனைந் தன்ன செலவின்
10 நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே. (1)
(புறத்திரட்டு, பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6,
இளம். 8; ந. மேற். அடி க:சீவக. 339, ந. மேற்.)


இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
எரிஅவிழ்ந் தன்ன விரிஉளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடும்செல(வு) இவுளி
5  கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ(டு)
ஊன்வினை கடுக்குந் தோன்றல பெரி(து)எழுந்(து)
அருவியின் ஒலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசம் கண்உற்றுக்
கதித்(து)எழு மாதிரம் கல்என ஒலிப்பக்
10 கறங்(கு)இசை வயிரொடு வலம்புரி ஆர்ப்ப
நெடுமதில் நிரைஞாயில்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை ஆர்அரண் காப்(பு)உடைத் தேஎம்
நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்(பு) ஒரீஇ
15 ஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்றஇவண் வீங்கிய செலவே. (2)
(தொல். புறத். 12, 25, ந. மேற்.)
பேணுதரு சிறப்பின் பெண்இயல்(பு) ஆயினும்
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர்த் தான்அறி குநளே. (3)
(தொல். கற்பு. 39, ந. மேற்.)


வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் தேரொடு சுரந்து
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை
மாரி என்னாய் பனிஎன மடியாய்
5  பகைவெம் மையின் அசையா ஊக்கலை
வேறுபுலத்(து) இறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலைதேய
மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
10 இடாஅ ஏணிநின் பாசறை யானே. (4)
(புறத்திரட்டு, பாசறை. 8)
ஒவிசயந் தப்பியஒ என்னும் பதிற்றுப்பத்து ஈகை
கூறிற்று (5)
(தொல். புறத். 20, ந. மேற்.)