பாஞ்சாலி சபதம்/45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்

விக்கிமூலம் இலிருந்து
45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்

வேறு

எப்பொழு தும்பிர மத்திலே -- சிந்தை
ஏற்றி உலகமொ ராடல்போல் -- எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் -- வகை
தானுணர்ந் தான்ஸக தேவனாம் -- எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் -- வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -- அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் -- அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். 25