பாதுகாப்புக் கல்வி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பாதுகாப்புக்கல்வி


தேசிய விருது பெற்ற பேராசிரியர்
பல்கலைப் பேரறிஞர்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI


சாந்திமலர் பதிப்பகம்
8, காவலர் குடியிருப்புச் சாலை
தி. நகர், சென்னை - 600 017
தொலைபேசி: 4332696

நூல் விபர அட்டவணை

நூலின் பெயர்  : பாதுகாப்புக் கல்வி

மொழி  : தமிழ்

பொருள்  : பாதுகாப்பு

ஆசிரியர்  : டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பதிப்பு  : முதல் பதிப்பு டிசம்பர் 2000

நூலின் அளவு  : கிரவுன்

படிகள்  : 1200

அச்சு :14 புள்ளி

தாள்:வெள்ளைதாள்

பக்கங்கள்:78

நூல்கட்டுமானம்:அட்டைக்கட்டு

விலை:ரூ. 15-00

உரிமை:பதிப்பாளருக்கு

வெளியிட்டோர்:சாந்திமலர் பதிப்பகம்
8, காவலர் குடியிருப்புச் சாலை
தி. நகர், சென்னை - 600017.
தொலைபேசி: 4332696

அச்சிட்டோர் : கிரேஸ் பிரிண்டர்ஸ்
சென்னை-600 017.



பதிப்புரை

இன்றைய உலகம் மிக அவசரத்தில் வாழும் உலகமாகும். தன் அலுவலகம் செல்லவோ, தான் பயிலும் இடத்திற்குச் செல்லவோ, மிக துரிதப்பட்டு செல்லும் காலமாக இருக்கிறது. இவ்வாறு அவசரத்தில் சாலையில் நடந்தோ, அல்லது வாகனத்தில் செல்லும் பொழுதோ, தான் மட்டும் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்க. தன் பாதுகாப்பும், பிறர் பாதுகாப்பும் தன்னிடம் இருக்கின்றது என்பதை மறந்து செல்லும் மக்களுக்கு, தன் கடமைக் கரங்களை நீட்டி 'நில்-கவனி-நட' என்று கூறும் காவல் அதிகாரியைப் போன்று டாக்டர். நவராஜ் செல்லையா அளிக்கும் `பாதுகாப்பு கல்வி' என்ற இந்த நூல் அமைந்திருக்கிறது. .

உடற்கல்வி திட்டத்தின் மூன்று பகுதிகளில், சுகாதாரப் பகுதியில் மிக முக்கியமானது பாதுகாப்புக் கல்வியாகும். வீட்டில் பாதுகாப்பு, பள்ளியில் பாதுகாப்பு, சாலையில் பாதுகாப்பு என்பது எல்லோருக்கும் மிக அவசியம். சிறு பிள்ளைகளை வீட்டில் கவனிக்கும் பெற்றோருக்கும், மாணவ மாணவிகளை கண்காணிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மற்றும் சாலையில் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் உபயோகப்படும் புத்தகம், இந்த புத்தகமாகும்.

வாழப் பிறப்பது மட்டுமன்றி, நாம் எவ்விதமாக வாழ்ந்தால் விபத்துகளைத் தவிர்த்து, சுகத்துடன் அநேக நாட்கள் வாழலாம் என்பதையும் கூறுகிறார் ஆசிரியர். அவ்வாறு கூறுவதை, இனிய எளிய தமிழில், யாவரும் விரும்பி படிக்கத்தக்க விதமாய் எழுதி இருக்கிறார். டாக்டர். நவராஜ் செல்லையா, தன் வேலையை திறம்பட செய்வதுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் அனைவரையும் 'நில் - கவனி -நட' என்று சரியான பாதையில் அவர்களை நடத்துவதற்காக உருவாக்கிய இப்புத்தகத்தை, அனைவரும் விரும்பிப் படித்து, வாழ்வில் நிறைவு காண்பார்கள் என்பது நிச்சயம்.

உடற்கல்வி கட்டாயப் பாடத்திட்டமர்க பள்ளிகளில் வந்த இந்த நல்ல நேரத்தில், இந்த நூல் உபயோகமான நூல்கள் எளிய தமிழில் தேவை. இத்தேவையை நிறைவாக்க இன்னும் பல நூல்களை தமிழகத்திற்கு அளிக்க, டாக்டர். நவராஜ் செல்லையா அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.


அரிமா. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்
பதிப்பாளர்

முன்னுரை

உலகில் வாழும் ஒவ்வொருவரும் இன்பமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். அதிலும், துன்பம் கலவாத இன்பமே வேண்டும்' என்று திரும்பத் திரும்ப அதே நினைவுடன் தான் வாழ்கின்றார்கள்.

யுத்தகளம் போல நிகழ்ச்சிகள் நடைபெறும் வாழ்க்கையில், பத்திரமாக வாழவேண்டும் என்பதுவே, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாக அமைந்திருக்கிறது.

சில சமயங்களில் வருத்தப்படுவதும், சிந்தனை இருந்தால் திருத்திக் கொள்வதுமாகவே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதாவது வேறுவழியில்லை என்பதால்.

பத்திரமாக, பாதுகாப்பாக வாழக் கற்றுக் கொள்வது, துன்பம் வராமல் தடுக்கவும், வந்தால் தவிர்க்கவும், வந்தபின் தடுமாற்றம் இல்லாமல் எதிர் கொள்ளவும், புதிரைவிடுவித்துக் கொள்ளவும் கூடிய இனிய வழிகளை, துணையாகும் நினைவுகளைத் தருவதற்காகவே.

அதனால், எதுவும் நம்மை இம்சைப் படுத்துவதில்லை மாறாக நம்மை இதப்படுத்துகிறது. இனிய வாழ்வுக்குப் பதப்படுத்துகிறது. அனுதினம் நம்மை சுகப்படுத்துகிறது.

இத்தகைய அதிய வழிகளை இளைஞர்கள் கற்றுக் கொண்டு வாழவேண்டும் என்பது கல்வியாளர்களின் விருப்பமாகும். மாணவ மணிகள் மனதிலே, இந்தக் கொள்கைகள் பதிய வேண்டும் என்பது அவர்களின் மாறத வேட்கையுமாகும்.

அந்த வேட்கையின் மறு பதிப்பே, 'பாதுகாப்புக்கல்வி' எனும் பெயரில் பாடத்திட்டமாக உருவாகி இருக்கிறது.

மாணவர்கள் அதிகமாக நடமாடும் வீடுகள் சாலைகள், விளையாடும் மைதானங்கள், உள்ளாடும் அரங்கம், நீச்சல் குளம் போன்ற இடங்களில், பாதுகாப்பாக இருக்க வேண்டிய முறைகளை எல்லாம் தொகுத்து, இந்நூல் விளக்கி இருக்கிறது.

மாணவர்கள் தங்கள் மனதில் எளிதாகப் பதியவைத்துக் கொள்ளவும், தேர்வுக்கு நினைவுபடுத்திக் கொள்ளவும் போன்ற வகையில் இந்நூல் எழுதப்பெற்றிருக்கிறது.

ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்நூல் அரிய வழிகாட்டியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்து திரு. M.S. மணி அவர்களுக்கும். சிறப்புற வெளிவரத் துணைபுரிந்த திரு. சாக்ரட்டீஸ் அவர்களுக்கு, அன்பு கலந்த நன்றி.

எனது விளையாட்டுத்துறை நூல்கள் அனைத்தையும் வாங்கி, ஆதரித்து, உதவுகின்ற அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றியும் வணக்கமும்.

ஞானமலர் இல்லம்

தி.நகர். சென்னை-17 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பாதுகாப்புக்_கல்வி&oldid=1520030" இலிருந்து மீள்விக்கப்பட்டது