பெருங்கதை/1 50 குறிஞ்சிநிலம் கடந்தது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

1 50 குறிஞ்சிநிலங் கடந்தது

முல்லைநிலம் கடந்தபின்[தொகு]

விரைந்தன னாகிய விரல்கெழு வீரியன்
முகைந்த புறவின் முல்லையம் பெருந்திணை
இகந்த பின்றை யிருபாற் பக்கமும்

குறிஞ்சிநில வருணனை[தொகு]

அளப்பரும் படிவத் தான்றோர் போலத்
துளக்க மில்லாத் திருத்தகு நிலைமைய 5
மதுரம் பொதிந்த மழலையங் கிளவிச்
சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்துத்
தொட்டிமை கலந்த தூசுவிரி யல்குற்
பட்டிமை யொழுக்கிற் பலர்தோய் சாயல்
அரம்போ ழவ்வளை மகளிர் மனத்தின் 10
நிரம்பா நெறியின வாகி யரும்பொருள்
கல்லா மாந்த ருள்ளம் போல
நொய்ந்நுரை சுமந்து மெய்ந்நயந் தெரிந்த
மேலோர் நண்பிற் றாழ விழிதரும்
அருவி யறாஅ வாகலி னயல 15
பருவி வித்திய பைந்தாட் புனந்தோ
றீரமில் குறவ ரிதண்மிசைப் பொத்திய
ஆரத் துணியொடு காரகில் கழுமிய
கொள்ளிக் கூரெரி வெள்ளி விளக்கிற்
கவரிமா னேறு கண்படை கொள்ளும் 20
தகரங் கவினிய தண்வரைச் சாரல்
நறையு நாகமு முறையிரு வேரியும்
வருக்கையும் மாவும் வழையும் வாழையும்
அருப்பிடை நிவந்த வாசினி மரமும்
பெருஞ்செண் பகமும் பிண்டியும் பிரம்பும் 25
கருங்கோற் குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்
சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு மரலும்
வால்வெள் வசம்பும் வள்ளிதழ்க் காந்தளும்
பால்வெண் கோட்டமும் பனிச்சையுந் திலகமும்
வேயும் வெதிரமும் வெட்சியுங் குளவியும் 30
ஆய்பூந் தில்லையு மணிமா ரோடமும்
ஆரமுஞ் சந்து மகிலுந் தமாலமும்
ஏரில வங்கமு மேலமு மிருப்பையும்
ஓரி மீமிசைப் பாய்தலிற் கிழிந்து
பொதிக்க ணிறாஅற் பூம்புறம் புதைஇ 35
மதிக்கண் மறைந்த மாசுண மான
மணிவரை மருங்கி னணிபெற வொழுகி
முதிர்பூங் காவி னுதிர்தா தளைஇ
மலைவாழ் குறவர் மகளிர் குடையும்
சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பிற் 40
பாடுபெயர்த் தறியாப் பக்கம் பயின்ற
கோடுயர் நிவப்பிற் குளிர்மலை யோங்கி
மாட நிரைத்த மறுகை போல
நிரப்ப மெய்தி முரப்புநிலை முனாது
கல்லிற் காட்டிய செல்லற் றூவழிப் 45
பிண்டி பிணங்கிப் பிலம்புக் கதுபோல்
கண்டவர்க் காயினுங் கடத்தற் காகா
அருமை யெய்திய வரிலமை யாரிடை
இறும்பம லடுக்கத் தின்றேன் கொளீஇய
பொங்கெரி விளக்கம் ….ம் 50
ஏனற் பெருந்தினை யேனங் காவலர்
கானற் பெருமரங் மண்ணுற மாட்டி
இருள்பட வோங்கிய வெல்லை வேலிதொறும்
வெருள்படப் போக்கிய வெண்டீ விளக்கம்
மங்குல் வானத்து மதிநிலா மழுங்கக் 55
கங்குல் யாமத்துக் கடையற வெழுந்த
கதிரோன் போல வெதிரெதிர் கலாஅய்
நறும்பூஞ் சோலை நாற்றங் கழுமிய
குறுஞ்சிப் பெருந்திணை குலாஅய்க் கிடந்த
பதிற்றுப் பத்தொடு விதிப்பட வெண்ணிய 60
ஐயைந் தொல்லையு மரையிரு ண்டுநாள்
எய்தி யிகந்தன்றா லியற்றமை பிடியென்.

1 50 குறிஞ்சிநிலங் கடந்தது முற்றிற்று.