பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்

விக்கிமூலம் இலிருந்து

சத்தியமூர்த்திப் பஞ்சகம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)[தொகு]

(1) சிங்கத்தின் குகைக்குள் சென்று

பிடரியைப் பிடித்தல் போன்று

பங்கத்தின் கிடங்காய் நின்ற

பாழ்வெள்ளை நகரம் சென்று

வங்கத்தின் சிங்கம் சொன்ன

வந்தே மாதரத்தைச் சொன்னான்!

தங்கத்தின் உயர்ந்த வீரன் !

தமிழ்தந்த சத்ய மூர்த்தி !

(2) வில்லம்பு தொடுத்தி டாமல்

வெள்ளையர் தீமை யெல்லாம்

சொல்லம்பு தொடுத்தே ஈங்குத்

தொலைத்திட்ட உண்மை வீரன் !

இல்லம்பு ரந்தி டாமல்

இந்தியத் தாயைக் காக்க

வெல்லம்பும் இங்கி லாந்தில்

விடுத்திட்ட வெற்றி வீரன்!


(3) காமத்தைப் பெயரில் கொண்டும்

காமத்தை வென்ற ராசன்

நாமத்தை பரப்பு மாறு

நன்னெறி உபதே சித்தே

ஏமத்தில் குருவாய் நின்றான் !

இன்தமிழ் சத்ய மூர்த்தி

தோமற்றோன் தோன்றி நூறாம்

ஆண்டது நிறையும் நாளில்!

நூற் காப்பு[தொகு]

இறை வணக்கம்[தொகு]

(பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அன்பே! அருளே! அறிவே! திருவே!

அகமே! புறமே! அளியே! வளியே!
அனலே! புனலே! மணியே! மணியே!
அலையே! அலையே! அழகே! குழகே!

இன்பே! எழிலே! இறையே! மறையே!

இதமே! பதமே! சதமே! விதமே!
இரவே! பகலே! இருளே! ஒளியே!
இறப்பே! பிறப்பே! இருப்பே! மறைப்பே!

முன்பே! முடிவே! நடுவே! தொடர்பே!

முன்பே! கனிவே! துணிவே! பணிவே!
மொழியே! விழியே! வழியே! கிழியே!
முழவே! உழவே! மழவே! விழவே!

என்பே! உயிரே! உளமே! வளமே!

எளிதே! அரிதே! சிறிதே! பெரிதே!
எண்ணே! எழுத்தே! எவணும் நிறையும்
இறையே சரணம்! சரணம்! சரணம்!