மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/7. கிறிஸ்துவத் துறவியின் பாராட்டு

விக்கிமூலம் இலிருந்து

7. கிறிஸ்துவத் துறவியின் பாராட்டு

ஒருசமயம் வியாபாரத்தின் பொருட்டு, ஷாம் தேசத்துக்குப் புறப்படத் தீர்மானித்தார்கள் அபூதாலிப்.

அப்பொழுது, பெருமானார் அவர்கள் தம்மையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பன்னிரண்டு.

அபூதாலிப் மறுக்காமல் பெருமானாரையும் கூட்டிக்கொண்டு வியாபாரக் கூட்டாத்தாருடன் ஷாம் தேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அந்தக் கிறிஸ்துவத் துறவி வேதங்களைக் கற்று, அறிந்து, ஆராய்ந்தவர். எதிர்காலத்தில் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றுவார் என்பதையும் அவ்வாறு தோன்றுவதற்கான அறிகுறிகளையும், அவ்வேதங்களில் குறிப்பிட்டிருந்ததை அவர் நன்கு அறிந்திருந்தார்.

பெருமானாரிடம் அந்தத் துறவி உரையாடும் பொழுது, அவர்களுடைய முகத்தோற்றத்தையும், அறிவுக்கூர்மையையும், கனிவான சொற்களையும் கண்டு வியப்புற்றார்.

"அபூதாலிப் அவர்களே! இப் பாலகரை கவனமாகப் பார்த்துக் கொள்வீராக! இவர் அரேபியாவின் பேரொளி ஆவார்.

"அரேபியாவிலுள்ள விக்கிரக வழிபாட்டை, அடியோடு அகற்றுபவர் இவர்!

"ஹல்ரத் ஈஸா நபி அவர்களின் முன் அறிவிப்புப்படி, ஆண்டவனால் இறுதியாக அனுப்பப்பட்டுள்ள நபி இவர்களே!

"இவர்களுக்கு யூதர்களினால் எந்த இடையூறுகளும் உண்டாகாமல் கவனமாகப் பாதுகாத்து வருவீராக” என்று கூறினார் கிறிஸ்துவத் துறவி.

அதிலிருந்து, அபூதாலிப், பெருமானாரை முன்னிலும் பன்மடங்கு கவனமாகப் பாதுகாத்து வரலானார்.