மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/8. இயற்கை வனங்களைப் படைத்த ஆண்டவன்

விக்கிமூலம் இலிருந்து

8. இயற்கை வனங்களைப் படைத்த ஆண்டவன்

பெருமானார் அவர்கள் ஹல்ரத் அபூதாலிபு முன் ஷாம் தேசத்துக்குப் பயணமாகச் சென்றபொழுது ஆண்டவனுடைய பெருமையையும் வல்லமையையும் காட்டக் கூடிய பல அரிய காட்சிகள் பெருமானாருக்கு நன்கு புலப்பட்டன.

மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் ஆகியவைப் பெருமானார் அவர்களின் உள்ளத்தில் என்றும் அகலாத ஓர் உண்மையை உணர்த்தின என்றே கூறவேண்டும்.

“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்” என்பதை எண்பிக்கும் வகையில் இவற்றை யெல்லாம் சுட்டிக்காட்டி, "இத்தகைய பொருள்களை எல்லாம் படைத்தது யார்? அவனுடைய உண்மையை இந்தப் பொருள்கள் உணர்த்தவில்லையா?” என்று சொல்வார்கள், பெருமானார் அவர்கள்.