மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/“துன்ப உலகம்”

விக்கிமூலம் இலிருந்து

84. “துன்ப உலகம்"

தெரு வழியே நடந்து சென்ற பக்குடுக்கை நன் கணியார் புதுப்பது அனுபவங்கள் அடைந்தார். என்னே வாழ்க்கை. என்னே உலகம்.

ஒரு வீட்டிலே சாப்பறை கேட்கிறது மற்றொரு வீட்டிலே முழவு முழங்குகிறது.

ஒரு வீட்டில் திருமணம்!

அடுத்த வீட்டிலே பிணம்!

மணமாகிய பெண்டிர் மகிழ்கின்றனர்; பிணமாகிய கணவனைப் பிரிந்த பெண்டிர் அழுகின்றனர்!

இவ்வுலகின் தன்மையோ மிகுந்த துன்பம் செறிந்தது.

இவற்றை உணர்ந்தோர் அழ வேண்டுமா?

உலகின் உண்மை இயல்பை உணர்ந்தவர், துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தை மட்டுமே கண்டு நன்னெறிக்கண் ஈடுபட்டு மகிழ் வேண்டும்.