முடியரசன் தமிழ் வழிபாடு/002-049

விக்கிமூலம் இலிருந்து

2. அருள்வாய் அம்மா


செந்தமிழே என்னுயிரே புலவர் நெஞ்சில்
சேர்ந்தாடும் எழில்மயிலே என்னுட் பொங்கி
உந்திவரும் உணர்வதனால் கூவிக் கூவி
உவகைதரும் பூங்குயிலே மொழிக்கு லத்தில்
முந்திவரும் தெய்வதமே என்னைச் சூழ்ந்து
மொய்த்துவரும் துன்பமெலாம் நீக்கி யின்பம்
தந்துவரும் ஆரணங்கே அன்பே நின்றன்
தாள்வணங்கி நிற்கின்றேன் அருள்வாய் அம்மா.

[பாடுங்குயில்]